உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மின் நிலைய கள பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

மின் நிலைய கள பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

பாலக்கோடு: மாராண்டஹள்ளி துணை மின் நிலைய அலுவலகத்தில் பணிபு-ரியும் கள பணியாளர்களுக்கு, மின் பாதுகாப்பு குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது. உதவி செயற்பொறியாளர் மோகன்குமார் தலைமை வகித்தார்.இதில், மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் கள பணியா-ளர்கள், விபத்து ஏற்படாமல் பணி புரிவது குறித்தும், மின் பாது-காப்பு சாதனங்கள் பயன்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்-கப்பட்டது.தொடர்ந்து, அனைத்து களபணியாளர்களுக்கும் மின் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில், உதவி பொறியாளர் திவாகர், அலுவலக பணியாளர்கள் மற்றும் மின்வா-ரிய கள பணியாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ