உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தனியார் வேலைவாய்ப்பு முகாம் பணி நியமன ஆணை வழங்கல்

தனியார் வேலைவாய்ப்பு முகாம் பணி நியமன ஆணை வழங்கல்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம், இரண்டு நாட்கள் நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவனத்திலுள்ள காலி பணியிடங்களுக்கு நேர்-காணல் நடந்தது. முகாமில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணி நியமன ஆணை-களை வழங்கினார். இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ