உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பென்னாகரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பென்னாகரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பென்னாகரம்: பென்னாகரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிரதான சாலை-களின் இருபுறமும், ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்-தனர்.கடந்த, 15 நாட்களாக நெடுஞ்சாலைத்துறையினர், ஆக்கிரமிப்பு கடைகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஒலிப் பெருக்-கியின் மூலம் அறிவித்தும் வந்தனர். நேற்று, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. பொக்லைன் உதவியோடு நெடுஞ்சாலைத்துறையினர் போடூர், 4 ரோடு பகுதியில் தொடங்கி, போலீஸ் ஸ்டேஷன், தாசில்தார் ஆபீஸ், கடை வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட், முள்ளுவாடி, தற்கா-லிக பஸ் ஸ்டாண்ட், அம்பேத்கர் சிலை வரை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பென்னாகரம் டி.எஸ்.பி., மகாலட்சுமி தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை