உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உழவர் சந்தைகளில் 2 நாளில் 143 டன் காய்கறி விற்பனை

உழவர் சந்தைகளில் 2 நாளில் 143 டன் காய்கறி விற்பனை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தி, தாளவாடி என ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது. ஆடி அமாவாசையை ஒட்டி நேற்று காய்கறி வரத்து அதிகரித்தது.சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான, 30.90 டன் காய்கறி மற்றும் பழங்கள், 11.௨௩ லட்சம் ரூபாய்க்கு விற்றது. மாவட்டத்தில் ஆறு உழவர் சந்தைகளுக்கும் வரத்தான, 73.71 டன் காய்கறி மற்றும் பழங்கள், 26.20 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. ஆடி 18ல் உழவர் சந்தைகளுக்கு, 69.56 டன் காய்கறி மற்றும் பழங்கள் வரத்தாகி, 24.55 லட்சம் ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை