உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறப்பு

கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறப்பு

புன்செய்புளியம்பட்டி, ஆக. 23-பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நடப்பாண்டு பாசனத்துக்கு, கடந்த, ௧௫ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த, 19ம் தேதி இரவு வாய்க்காலின், 47வது மைலில் பெருந்துறை, நல்லாம்பட்டி அருகே கசிவு ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.கசிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. பணி முடிந்த நிலையில் நேற்று காலை, கீழ்பவானி வாய்க்காலில், 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை