உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏ.டி.எம்.,மில் கூடுதலாக வந்த பணத்தை ஒப்படைத்த மாணவர்

ஏ.டி.எம்.,மில் கூடுதலாக வந்த பணத்தை ஒப்படைத்த மாணவர்

தாராபுரம் : தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காந்தி நகரில், தேசிய வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. அலங்கியம் அரசு உயர்நிலைப்பள்-ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் முகிலன், கவுசிக், பணம் எடுக்க நேற்று சென்றனர். பணம் எடுத்தபோது, 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாண-வர்கள், கூடுதலாக வந்த தொகையை அலங்கியம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஒப்படைத்தனர். 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில், பணத்தின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத்தை கண்டறிந்து, மாணவர்கள் முன்னிலையில் அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி