| ADDED : ஆக 16, 2024 01:01 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட டி.எஸ்.பி.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் விபரம் வருமாறு: திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு சீனிவாசன், கோபி; திருப்பூர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு முத்து குமரன், ஈரோடு டவுன்; ஈரோடு டவுன் ஜெய்சிங், கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு; கோபி தங்கவேல், ஈரோடு மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல் திருநெல்வேலி மாநகர் குற்ற பதிவேடுகள் பிரிவு சந்திரசேகரன் பவானி; கோவை மாநகர் கட்டுப்பாட்டு அறை சுரேஷ்குமார் தாராபுரம்; ஈரோடு குற்றபதிவேடுகள் பிரிவு ஆறுமுகம் உடுமலை; பவானி அமிர்தவர்ஷினி விழுப்புரம் சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., பிரிவுக்கும் இடமாற்றம் செய்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.