உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடும் பனிப்பொழிவால் வரத்து குறைவு மல்லிகைப்பூ கிலோ ரூ.4,600க்கு விற்பனை

கடும் பனிப்பொழிவால் வரத்து குறைவு மல்லிகைப்பூ கிலோ ரூ.4,600க்கு விற்பனை

பு.புளியம்பட்டி: கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்ததாலும், முகூர்த்த சீசன் காரணமாக புன்செய் புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ, 4,600 ரூபாய்க்கு விற்பனையானது.புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் புன்செய் புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்துள்ளது. இதற்கிடையே தற்போது தமிழகம் மற்றும் கேரளாவில் முகூர்த்த சீசன் தொடங்கியுள்ளதால் மல்லிகை பூவின் தேவை அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் கிலோ, 2,700 ரூபாய்க்கு விற்பனையான மல்லி கைப் பூ நேற்று விலை உயர்ந்து, 4,600 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் முல்லை பூ கிலோ, 1,000 ரூபாய்க்கு விற்பனையானது, நேற்று கிலோ, 2,000 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ, 50 ரூபாய்க்கும் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி