உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலையில் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து

சாலையில் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து

காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு விபத்துக்குள்ளான சோளம் லோடு ஏற்றி வந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கோவை அரசு போக்குவரத்து கழகம், பழனி--2 பணிமனையை சேர்ந்த அரசு பஸ், அந்தியூரில் இருந்து பழனி செல்வதற்காக, 70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று மதியம், 3:40 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, சோளம் லாரியின் பக்கவாட்டில் பஸ் மோதியது. இதில் லாரியின் தார்பாய் சேதமடைந்து சோளம் மூட்டைகள் சாலையில் கொட்டின. பயத்தில் பயணிகள் அலறினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மாற்று பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை