உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுமைதாங்கி உயர்மட்ட பாலப்பணி 5 நாட்களில் முடியும்

சுமைதாங்கி உயர்மட்ட பாலப்பணி 5 நாட்களில் முடியும்

பவானி : வெள்ளித்திருப்பூர் அருகே சுமைதாங்கியில், உயர்மட்ட பாலத்தின் இறுதி கட்டப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.கெட்டிசமுத்திரம் ஏரி உபரிநீர் செல்லும் சுமைதாங்கி பகுதி, பள்-ளமாக இருப்பதால், வெள்ளம் செல்லும்போது அந்தியூர் செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்படும் சூழல் இருந்தது.இதனால் சுமைதாங்கியில் உயர்மட்ட பாலம் கட்டித்தர மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் பல கோடி ரூபாய் மதிப்பில், நான்கு மாதங்களுக்கும் மேலாக பணி நடந்து வருகி-றது.அடுத்த மாதம் 7ம் தேதி, புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் பண்டிகை நடப்பதால், பிரதான சாலையான சுமைதாங்-கியில், பாலம் கட்டும் பணியை விரைவில் முடிக்க மக்கள் வலியு-றுத்தினர். இதனால் பாலம் கட்டும் பணியில், இறுதிக்கட்ட வேலை தீவிரமாக நடந்து வருகிறது.இன்னும் ஐந்து நாட்களில் பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை