| ADDED : நவ 25, 2025 05:39 AM
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அ ருகே குடிபோதையில் தாயை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த பரனுார், பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ், 60; இவரது மனைவி விஜயலட்சுமி, 55; இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி, சென்னையில் வசித்து வருகிறார். இளைய மகன் பிரகாஷ், 29; திருமணமாகி பரனுாரில் வீட்டிலேயே தங்கியுள்ளார். அவ்வப்போது சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுவது மற்றும் புதுச்சேரியில் ஓட்டல்களில் வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கம் உடைய இவர், நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்தவர், தனது தந்தை கனகராஜிடம், 'நீங்கள் என்ன சொத்து சம்பாதித்து வைத்துள்ளீர்கள்' எனக் கேட்டு தகராறு செய்து, தாக்கியுள்ளார். தடுத்த தாய் விஜயலட்சுமியையும் கல் மற்றும் கையால் சரமாரியாக தாக்கினார். இதில் இருவரும் படுகாயமடைந்து மயங்கி விழுந்தனர். உடன், இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல் லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு விஜயலட்சுமி இறந்தார்; கனகராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து தாயை அடித்து கொலை செய்த மகன் பிரகாஷை கைது செய்தனர்.