உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சுரகரேஸ்வரர் கோவிலில் வரும் 10ல் குபேரர் அட்சய திருதியை வழிபாடு

சுரகரேஸ்வரர் கோவிலில் வரும் 10ல் குபேரர் அட்சய திருதியை வழிபாடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், சுரகரேஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான குபேர ஸ்தலமான இக்கோவிலில், மூலவர் உள்ள கருவறைக்கு முன் ஐந்தடி உயரத்தில் குபேரர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.காஞ்சியில் முதன் முதலில், குபேரனுக்கு என, தனி சிலை இங்கு நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. அட்சய திருதியை அன்று, குபேரனை வழிபட்டால், செல்வ செழிப்பிற்கு வழிவகுப்பதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இதனால், ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று குபேரனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அட்சய திருதியை தினமான வரும் 10ம் தேதி, இக்கோவிலில் குபேரர் அட்சய திருதியை வழிபாடு நடக்கிறது.இதில், காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, கூட்டு வழிபாடு சங்கல்பம், மங்கல இசை, காலை 10:00 மணிக்கு மஹா தீபாராதனையும் நடக்கின்றன.விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் தர்மகர்த்தா, குபேரர்அட்சய திருதியை வழிபாட்டுக் குழுவினர், கோவில் அர்ச்சகர் உள்ளிட்டோர் இணைந்து செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை