உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பண்ருட்டியில் நிழற்குடையின்றி பஸ் நிறுத்தம்: வெயில், மழையில் அவதிப்படும் பயணியர்

 பண்ருட்டியில் நிழற்குடையின்றி பஸ் நிறுத்தம்: வெயில், மழையில் அவதிப்படும் பயணியர்

ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் அடுத்த, பண்ருட்டி பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாததால், பயணியர் மழை, வெயிலில் திறந்தவெளியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், பண்ருட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் உள்ள பண்ருட்டி பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, ஒரகடம், படப்பை, தாம்பரம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறனர். அதேபோல, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும், சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர் 500க்கும் மேற்பட்டோர் தினமும் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேருந்து நிறுத்தத்தில், நெடுஞ்சாலையின் இருபுறமும் பயணியர் நிழற்குடை இல்லை. பேருந்திற்காக காத்திருக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ - மாணவியர் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பண்ருட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை