உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / லட் சுமி ஹயக்ரீவர் சன்னிதியில் 28ல் ஏகதின லட்சார்ச்சனை

லட் சுமி ஹயக்ரீவர் சன்னிதியில் 28ல் ஏகதின லட்சார்ச்சனை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவில் உள்ள துாப்புல் பரகால மடத்தில், லட் சுமி ஹயக்ரீவருக்கு என தனி சன்னிதி உள்ளது.இங்கு ஆண்டுதோறும், உலக நன்மைக்காகவும், மாணவ - மாணவியர் தேர்வில் அதிக மதிப்பெண் தேர்ச்சி பெற்று வெற்றி பெறவும், கல்வி அபிவிருத்திக்காக கல்வி கடவுளான லட் சுமி ஹயக்ரீவருக்கு, ஏகதின சிறப்பு லட்சார்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஏகதின லட்சார்ச்சனை வரும் 28ல், பரகால மடத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு காலை 8:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல், இரவு 7:00 மணி வரையும் நடக்கிறது என, துாப்புல் பரகால மடம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை