உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமண விழா; ரூ.1.75 லட்சம் காணிக்கை

பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமண விழா; ரூ.1.75 லட்சம் காணிக்கை

கரூர்: கரூர், பசுபதீஸ்வரர் கோவில் தெய்வ திருமண விழாவில் 1.75 லட்சம் ரூபாய் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 1ல் முகூர்த்-தக்கால் நடுதலுடன் விழா தொடங்கியது. கடந்த, 9ல் தேவார இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலையில், பரத நாட்டிய நிகழ்ச்சி, முளைப்பாரி மற்றும் சீர் தட்டு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபி ேஷகம், 8:00 மணிக்கு மங்கள இசை, 10:45 மணிக்கு தெய்வ திருமண விழா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவா-மியை வழிபட்டனர்.அப்போது, தற்காலிக உண்டியல் காணிக்கை மற்றும் நன்கொ-டையாக பொதுமக்கள் செலுத்தினர். அதனை, கோவில் வளா-கத்தில் எண்ணும் பணி செயல் அலுவலர் சரவணன் முன்னி-லையில் நடந்தது. உண்டியல் காணிக்கையாக, 95 ஆயிரத்து, 455 ரூபாய் உள்பட ஒரு லட்சத்து, 75 லட்சத்து, 455 ரூபாய் இருந்-தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை