உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஆடிப்பெருக்கு கோலாகலம்

கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஆடிப்பெருக்கு கோலாகலம்

கிருஷ்ணராயபுரம்:ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் கதவணை காவிரி ஆறு கருப்பத்துார், சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவில், படித்துறை லாலாப்பேட்டை காவிரி ஆறு, ஆகிய இடங்களில் காவிரி ஆற்றில் படித்துறை அருகில் சென்று சுமங்கலி பெண்கள் மஞ்சள், குங்கமம், நுால் கயிறு, எலுமிச்சை, முளைப்பாரி ஆகியவைகள் கொண்டு பூஜை செய்து, காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர். மேலும் காவிரி ஆற்றில் அதிக-மான தண்ணீர் சென்றதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் மாயனுார், லாலாப்பேட்டை, போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை