உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சரவணபுரம் சாலையில் முள் செடிகளால் அவதி

சரவணபுரம் சாலையில் முள் செடிகளால் அவதி

கிருஷ்ணராயபுரம்: சரவணபுரம் சாலையின் இருபுறமும் முள் செடிகள் வளர்ந்துள்-ளதால், வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல முடியாமால் அவதிக்குள்ளாகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சரவணபுரம் - வரகூர் கிராமத்துக்கு செல்ல தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக குளித்தலை, வயலுார், பஞ்சப்பட்டி வரை மக்கள் வாகனங்களில் சென்று வரு-கின்றனர். இந்நிலையில், சரவணபுரம் பகுதியில் இருந்து வரகூர் செல்லும் சாலை வரை இருபுறமும் அதிகளவில் முள் செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால், எதிரே வரும் வாகனங்ளுக்கு வழிவிட முடியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிகளை சந்-தித்து வருகின்றனர். எனவே, பஞ்., நிர்வாகம் சாலையின் இருபு-றமும் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்ற தேவையான நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை