கரூர்: கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து குறைந்தது.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 975 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 491 கன அடியாக இருந்தது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு, 2,316 கன அடியில் இருந்து, 865 கன அடியாக குறைந்தது. அமராவதி அணையில் இருந்து, புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 350 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 88.09 அடியாக இருந்தது.மாயனுார் கதவணைகரூர் மாவட்டம், மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 23,707 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 26,936 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு சம்பா சாகுபடிக்காக, காவிரியாற்றில், 25,316 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில், 1,620 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பா-ளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.10 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்-காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது.மழை நிலவரம்கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,) அரவக்குறிச்சி, 2.60, அணைப்பாளையம், 11.20, க.பரமத்தி, 13.40, மயிலம்-பட்டி, 4 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுதும் சராசரியாக, 2.60 மி.மீ., மழை பெய்தது.