உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முதியவரை தாக்கியதாக தந்தை, மகன் மீது வழக்கு

முதியவரை தாக்கியதாக தந்தை, மகன் மீது வழக்கு

கரூர்: கரூர் அருகே, முன் விரோதம் காரணமாக முதியவரை தாக்கிய தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், வடக்கு காந்தி கிராமம் ஆர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 65; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முரளி, 49; என்பவருக்கும், கழிவுநீர் பாதை தொடர்பாக, முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த, 6ல் இரவு தங்கவேலுவுக்கும், முரளிக்கும் மீண்டும், கழிவுநீர் பாதை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரம் அடைந்த முரளி, அவரது மகன் ஹரிஹரன் ஆகியோர், உருட்டு கட்டையால், தங்கவேலுவை அடித்துள்ளனர்.அதில், தலையில் காயம் அடைந்த தங்கவேல், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து, தங்கவேல் அளித்த புகார்படி, முரளி, அவரது மகன் ஹரிஹரன் ஆகியோர் மீது, பசுபதிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ