உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வரும் 12ல் மாரியம்மன் திருவிழா பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

வரும் 12ல் மாரியம்மன் திருவிழா பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

கரூர்: கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழாவையொட்டி, பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியது.கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், வைகாசி திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். நடப்பாண்டு வரும், 12ல் கம்பம் நடுதலுடன் விழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து வரும், 17ல் பூச்சொரிதல் விழா, 19ல் காப்பு கட்டுதல், 27ல் தேரோட்டம், 28ல் மா விளக்கு ஊர்வலம், பால் குடம் ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், 29ல் கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.மேலும் வரும் ஜூன் மாதத்தில் பஞ்ச பிரகாரம், புஷ்ப பல்லக்கு, ஊஞ்சல் உற்சவம், அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதனால், கோவில் வளாகத்தில் வைகாசி திருவிழாவுக்காக, பந்தல் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை