உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வஞ்சுலேஸ்வர சுவாமி கோவிலில் அரிசி மூட்டைகள் திருட்டு புகார்

வஞ்சுலேஸ்வர சுவாமி கோவிலில் அரிசி மூட்டைகள் திருட்டு புகார்

கரூர்: கரூர், வஞ்சுலேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து, அரிசி மூட்-டைகளை திருடி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார்.அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:கரூர், அமராவதி ஆற்றுப்பகுதியில் வஞ்சுலேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. அதில், அன்னாபிஷேக விழாவுக்காக, கடந்த, 5ல் பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட அரிசி மூட்டைகள், மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன. இந்நி-லையில், கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கடந்த, 5 இரவு, 11:00 மணிக்கு அரிசி மூட்டைகளை சில நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனால், அரிசி மூட்டை-களை திருடி சென்றவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ