ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த ஒடையாண்டஹள்ளி அருகே ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் தோடன், 48. விவசாயி; இவருக்கும், அவரது தம்பிகளான திப்பன், 45, முனிராஜ், 43, ஆகியோர் இடையே, மூதாதையர் சொத்தை பிரிப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த, 23ம் தேதி காலை, 11:00 மணிக்கு பிரச்-னைக்குரிய நிலத்திலிருந்து திப்பன், முனிராஜ் தரப்பினர் தேங்காய் பறித்ததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் மரக்கட்டையால் தாக்கி கொண்டனர். இதில் காய-மடைந்த தோடன், கிருஷ்ணகிரி அரசு மருத்து-வக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார்.அவரது புகார்படி, திப்பன், அவரது மகன்கள் ஸ்ரீகாந்த், 26, ஸ்ரீநாத், 27, மற்றும் முனிராஜ் ஆகிய, 4 பேர் மீது ராயக்கோட்டை போலீசார் நேற்று முன்-தினம் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், தனது கணவர் திப்பன் மற்றும் மகன் ஸ்ரீகாந்த் ஆகியோரை தாக்கியதாக, சுந்தரா, 44, கொடுத்த புகார்படி, தோடன், அவரது மனைவி ராதா, 44, ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்-டது.