மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
12 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
12 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
12 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
12 hour(s) ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, சீனிவாசா காலனியில், கூட்டுறவு சங்கம் சார்பில் இயங்கி வரும் ரேஷன் கடையின் விற்பனையாளர் விவேக். இவர், கடந்த, 6ல் ரேஷன் கடையில் இல்லை. மாறாக அங்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த ஸ்ரீநாத் என்பவர், ரேஷன் கடையில் பொருட்களை வழங்கி வந்தார். இது குறித்து உரிய ஆதாரங்களுடன் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணியிடம் புகார் தெரிவித்தார். அதன்படி கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் ஆர்.ஐ., சதீஷ் தலைமையிலான அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இதில், ஸ்ரீநாத் என்பவர் விற்பனையாளர் விவேக் அறிவுறுத்தல் படி, ரேஷன் பொருட்களை வழங்கியது தெரிந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரேஷன் பொருட்கள் விற்ற பணத்தை, அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், கடையில் இருப்புள்ள பொருட்களையும் சரிபார்த்து, ரேஷன் கடையை மூடிச்சென்றனர். இது குறித்து விசாரித்து, மாவட்ட கலெக்டர், டி.ஆர்.ஓ., பொது வினியோக திட்ட அலுவலர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago