உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்

ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்

உத்தனப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை, சிறப்பு துணை தாசில்தார் பாரதி மற்றும் அதிகாரிகள், கெலமங்கலம் - உத்தனப்பள்ளி சாலையில் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், உத்தனப்பள்ளியிலிருந்து கெலமங்கலத்திற்கு, 5 யூனிட் ஜல்லி கற்களை ஏற்றி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். பாரதி புகார் படி, லாரி டிரைவர், உரிமையாளர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை