உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.82 லட்சத்தில் சாலை பணி துவக்கம்

ரூ.82 லட்சத்தில் சாலை பணி துவக்கம்

கிருஷ்ணகிரி: கட்டிகானப்பள்ளியில், 82 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, கலெக்டர், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர்.கிருஷ்ணகிரி ஒன்றியம், கட்டிகானப்பள்ளி பஞ்-சாயத்தில் பல சாலைகள் நீண்ட காலமாக சேதம் அடைந்து, குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கு-வதால், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாண-வியர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே, இப்பகுதியில் புதிய சாலை அமைக்க, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கட்டிகானப்பள்ளி பஞ்.,த்தில் புதிய வீட்டு வசதி வாரிய, 2ம் குடியி-ருப்பில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், கனிமவள நிதி, 82 லட்சம் ரூபாய் மதிப்பில், ராயக்கோட்டை சாலை முதல் கண்-ணப்பன் நகர் வரை இரு வழிச்சாலையாக, 700 மீ., தொலைவிற்கு தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை, கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். இதில், பி.டி.ஓ.,க்கள் உமாசங்கர், சிவபிரகாசம், உதவி பொறியாளர் ஜமுனா, தி.மு.க., அவைத்தலைவர் தட்ரள்ளி நாகராஜ், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் அன்ப-ரசு, நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, நகராட்சி கவுன்சிலர்கள் அஸ்லாம், வேல்மணி, பாலாஜி, செந்தில்குமார், புவனேஸ்வரி, தேன்மொழி உள்பட பலர் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி