மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
1 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
1 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
1 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
1 hour(s) ago
கிருஷ்ணகிரி: விதை தரத்தை அறிந்து கொள்ள, விதை பரிசோதனை அவசியம் என, கிருஷ்ணகிரி விதை விற்பனை நிலைய வேளாண் அலுவலர் லோகநாயகி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை: தரமான விதை என்பது, முளைப்புத்திறன், புறத்துாய்மை, பிற ரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை குறிக்கும். இத்தர நிர்ணயங்கள் ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும். தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க, நல்ல முளைப்பு திறன் வேண்டும். இதனால், விதை செலவு குறையும். புறத்துாய்மை பரிசோதனையில், பிற பயிர் விதை மற்றும் களை விதை கலப்புகள் கண்டறியப்படுவதால், விதையின் இனத்துாய்மை மற்றும் புறத்துாய்மை காப்பாற்றப்படுகிறது. முளைப்பு திறனை காக்க, ஈரப்பதத்தை தெரிந்து கொள்ளுதல் அவசியம். விதைகளை சேமிக்கும் போது, பூச்சி நோய் தாாக்குதலால் முறைப்புத்திறன் கெடாமல், நீண்ட நாட்கள் சேமிக்க, விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கக்கூடாது. இதற்கு, விதை பரிசோதனை அவசியம்.விதை விற்பனையாளர்கள், விதையின் தரத்தை அறிந்து கொள்ள, விதை மாதிரி எடுக்க வேண்டும். விதை, ஒரு மாதிரிக்கு, 80 ரூபாய் என்ற விகிதத்தில், வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம், கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி, என்ற முகவரிக்கு அனுப்பி, தரத்தை அறியலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago