உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவிரி குடிநீர் வழங்க மக்கள் வேண்டுகோள்

காவிரி குடிநீர் வழங்க மக்கள் வேண்டுகோள்

எலச்சிபாளையம்: கோக்கலை குடித்தெரு பகுதியில் கடந்த, 10 நாட்களாக காவிரி குடிநீர் வராததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எலச்சிபாளையம் யூனியன், கோக்கலை கிராமம், குடித்தெரு பகு-தியில், 60க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த, 10நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை. மக்கள் குடிப்பதற்கு தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். வேறு வழியின்றி, குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. அன்றாடம் கூலி வேலை செய்து வரும் மக்-களால், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவது சிரமமாக உள்ளதென தெரிவித்தனர். எனவே, காவிரி குடிநீர் தினமும் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்ப-குதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை