| ADDED : ஆக 23, 2024 02:41 AM
பந்தலுார்;பந்தலுார் சாலைகளில் சுற்றி திரிந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.பந்தலுார் பஜார் பகுதியில் நாள்தோறும் கால்நடைகள் அதிகளவில் உலா வருகின்றன.இதனால்,பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. மேலும், பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடைகள் இரவு நேரங்களில் மாற்று தொழுவமாக மாறி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் சார்பில், நகரில் உலா வரும் மாடுகளை பிடித்து அலுவலகத்தில் கட்டி வைத்து, உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்து, அவற்றை ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.பொதுமக்கள் கூறுகையில்,'இதேபோல தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்,' என்றனர்.