உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 65 ரேஷன் கடைகளுக்கு கருவிழிப்பதிவு கருவி

65 ரேஷன் கடைகளுக்கு கருவிழிப்பதிவு கருவி

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் 65 ரேஷன் கடைகளுக்கு கருவிழிப் பதிவு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்த பின் பொருட்கள் வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் ரேஷன் கார்டு தாரர்கள் பலருக்கு கைரேகை பதிவு விழுவதில்லை. அவர்களில் பலர் வட்ட வழங்கல் அலுவலரிடம் சான்று பெற்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.இந்த பிரச்னைக்கு தீர்வாக இப்போது கருவிழி பதிவு பெறும் வசதி, ரேஷன் கடைகளில் கொண்டு வரப்பட்டுள்ளது.இது குறித்து திருவாடானை வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன் கூறுகையில், திருவாடானை தாலுகாவில் 65 முழு நேர ரேஷன் கடைகளும், 20 பகுதி நேர கடைகளும் உள்ளன.இதில் முழு நேர 65 ரேஷன் கடைகளுக்கு கருவிழி பதிவு கருவி வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கைரேகை பதிவு விழாதவர்கள் இனி கருவிழி பதிவு செய்து பொருட்கள் வாங்கி கொள்ளலாம். கைரேகை பதிவுக்கு என தனியாக சான்று பெற தேவையில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி