உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  விடுதியில் மாணவருக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வழக்கு

 விடுதியில் மாணவருக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வழக்கு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு விடுதியில் பள்ளி மாணவருக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 மாணவர்கள்,விடுதி வார்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவர் டி-பிளாக் ரோடு அம்மா பூங்கா அருகே உள்ள அரசு சமூக நீதி விடுதியில் தங்கி படிக்கிறார். இவரை ஒரு வாரமாக விடுதியில் உள்ள 3 மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்து, ஜாதிபெயர் கூறி மிரட்டியதாக மாணவரின் தந்தை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இந்நிலையில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் 3 மாணவர்கள் மற்றும் விடுதி காப்பாளர் மீது போக்சோ சட்டம், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். டி.எஸ்.பி., சுகுமாறன் தலைமையில் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி