சேலம்: வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு, சேலம், நாமக்கல், கரூர் வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ஆக., 27, செப்., 2, 6 இரவு, 9:55க்கு புறப்பட்டு பெங்களூரு, சேலம், நாமக்கல், கரூர் வழியே, 2ம் நாள் நள்ளிரவு, 1:30க்கு வேளாங்-கண்ணியை அடையும். ஆக., 28, செப்., 3, 7 மாலை, 5:20க்கு சேலம், 6:19க்கு நாமக்கல் வந்து செல்லும். மறுமார்க்க ரயில் ஆக., 29, செப்., 4, 8 இரவு, 11:55க்கு கிளம்பி, 2ம் நாள் நள்ளிரவு, 12:05க்கு வாஸ்கோடகாமாவை அடையும். ஆக., 30, செப்., 5, 9 அதிகாலை, 5:09க்கு நாமக்கல், 6:05க்கு சேலம் வந்து செல்லும். இந்த ரயில்களில், 2 அடுக்கு ஏசி பெட்டிகள் - 2; 3 அடுக்கு ஏசி பெட்டிகள் - 4, ஸ்லீப்பர் பெட்டிகள் - 10, இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் - 2 இணைக்கப்பட்டுள்ளன. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.ரயில் தாமதம்சேலம் - நாமக்கல் தடத்தில் மல்லுார் அருகே தண்டவாள பராம-ரிப்பு பணி நேற்று நடந்தது. இதனால் மாலை, 6:00 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம் - கரூர் ரயில், ஒரு மணி நேரம் தாமத-மாக இரவு, 7:00 மணிக்கு கிளம்பியது. மறுமார்க்க ரயில் இரவு, 7:55க்கு பதில், ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.