உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கேட்பாரற்று கிடந்த 301 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 301 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

இடைப்பாடி, இடைப்பாடியில், கேட்பாரற்று கிடந்த, 301 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.இடைப்பாடி தாலுகா, நைனாம்பட்டி பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இதன் அருகில் உள்ள வீட்டின் பின்புறம், நேற்று முன்தினம் இரவு, 6 மூட்டை ரேஷன் அரிசி கிடந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள், இடைப்பாடி தாசில்தார் வைத்திய லிங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இடைப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் மதிஒளி, நைனாம்பட்டி வந்து கேட்பாரற்று கிடந்த 6 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர், இடைப்பாடி சிவில் சப்ளை கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. ரேஷன் அரிசியை கொண்டு வந்து போட்டது யார் என, தாசில்தார் வைத்தியலிங்கம் விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை