உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கர்நாடகா அணைகள் நீர்திறப்பு அதிகரிப்பு

கர்நாடகா அணைகள் நீர்திறப்பு அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு இரு நாட்களாக ஒரே அளவிலான தண்ணீர் வரும் நிலையில் கர்நாடகா அணைகளின் உபரி நீர் திறப்பு அதிக-ரிக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 11ல், 119.65 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நீர்வரத்து அதிகரித்-ததால் கடந்த, 12ல் மீண்டும், 120 அடியாக உயர்ந்தது.கடந்த, 14ல் அணை நீர்வரத்து வினாடிக்கு, 26,864 கனஅடியாக உயர்ந்த நிலையில், மின் நிலையங்கள் வழியாக பாசனத்துக்கு, 21,500 கனஅடி, 16 கண் மதகு வழியாக வினாடிக்கு, 2,500 கன-அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.அன்றைய தினம் நீர்வரத்து குறைந்ததால், 3 நாட்களுக்கு பின், மேட்டூர் அணை, 16 கண் மதகில் உபரி நீர் மீண்டும் நிறுத்தப்-பட்டு ஷட்டர்கள் மூடப்பட்டன. கடந்த இரு நாட்களாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 16,500 கனஅடி நீர் வந்தது.அணையில் இருந்து பாசனத்துக்கு மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு, 16,000 கனஅடி, கால்வாயில், 500 கனஅடி என மொத்தம், 16,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.நேற்று முன்தினம் கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நேற்று கே.ஆர்.எஸ்., அணைக்கு வினாடிக்கு, 20,361 கனஅடி நீர் வந்தது. இதில், 20,133 கனஅடி நீர் வெளியேற்றப்-பட்டது. கபினிக்கு வினாடிக்கு, 6,330 கனஅடி நீர் வந்த நிலையில், 6,177 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.இரு அணைகளிலும் கால்வாய் பாசனம் போக நேற்று வினா-டிக்கு, 23,000 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டதால் வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்வரத்து சற்று அதிகரிக்க வாய்ப்புள்-ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ