உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் மோதி முதியவர் பலி

மொபட் மோதி முதியவர் பலி

தாரமங்கலம்: இடைப்பாடி, வெள்ளாளபுரம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சன்னாசி, 60. இவர் நேற்று முன்தினம் இரவு, 8:45 மணிக்கு, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வதற்காக, பஸ் ஏற நடந்து சென்று கொண்டிருந்தார். ஜலகண்டாபும் - சின்னப்-பம்பட்டி சாலையில் சின்னம்பட்டி மண் திட்டு அருகே சென்ற-போது, மொபட்டில் வேகமாக வந்தவர், சன்னாசி மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த சன்னாசியை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். அவரது மனைவி பிச்சையம்மாள் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை