| ADDED : ஜூன் 27, 2024 11:44 PM
மானாமதுரை : மானாமதுரை அருகே இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச் ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.மின் அலங்கார தேர்பவனி வரும் 5ம் தேதியும்,6ம் தேதி நற்கருணைப் பெருவிழாவும் நடக்கிறது.இடைக்காட்டூரில் புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச் ஆண்டு தோறும் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று மாலை 6:00 மணிக்கு முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் கொடியேற்றம் மற்றும் சிறப்பு திருப்பலியுடன் துவங்குகிறது.முக்கிய நிகழ்ச்சியான திரு இருதய பெருவிழா வரும் 5ம் தேதி காலை 7:00 மணிக்கு திருப்பலியும்,காலை11:00 மணிக்கு பெருவிழா திருப்பலியும்,மாலை 6:00 மணிக்கு திருவிழா நிறைவு சிறப்பு திருப்பலியும் அதனைத் தொடர்ந்து மின் அலங்கார தேர்பவனியும் நடைபெற உள்ளது. மறுநாள் 6ம் தேதி மாலை 6:00 மணிக்கு நற்கருணை பெருவிழா நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை திருத்தல அருட்பணியாளர் இம்மானுவேல் தாசன், மரியின் ஊழியர் சபை சகோதரிகள், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை, திரு இருதய பக்தர்கள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.