உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் குரூப்-1 தேர்வுபயிற்சி வகுப்பு துவக்கம்

காரைக்குடியில் குரூப்-1 தேர்வுபயிற்சி வகுப்பு துவக்கம்

சிவகங்கை: காரைக்குடி படிப்பு வட்டம் சார்பில் கண்ணதாசன் மணிமண்டபத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.சிவகங்கை உதவி திட்ட அலுவலர் இளங்கோவன் தலைமை வகித்தார். சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., சுந்தரம் வாழ்த்துரை வழங்கினார்.திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய துணை பி.டி.ஓ., சிவா, தேவகோட்டை ரீகன், ஆசிரியர் பயிற்றுநர் பயாஸ் அகமது, காரைக்குடி படிப்பு வட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜி உள்ளிட்டோர் குரூப் 1 தேர்வு எழுத உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்தனர். சிவகங்கை படிப்பு வட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ