| ADDED : ஆக 15, 2024 04:02 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் 2024-=25ம் கல்வியாண்டின் முதுநிலை பாடப்பிரிவுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆக.19 அன்று நடை பெற உள்ளதாக கல்லுாரி பொறுப்பு முதல்வர் இந்திரா தெரிவித்தார்.அவர் கூறுகையில், ஆக.19 அன்று காலை 9:30 மணிக்கு நடைபெறவுள்ள முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வில் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். கல்லுாரிக்கு வரும் மாணவிகள் மாற்றுச் சான்றிதழ், இளங்கலை மதிப்பெண் சான்றிதழ், புகைப்படம் 3, ஆதார் அட்டை, ஜாதிச்சான்று உள்ளிட்டவைகளின் அசல் மற்றும் இரண்டு நகல் கொண்டு வரவேண்டும் என்றார்.