உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளைஞர்களுக்கு இலவச தொழில் நுட்ப பயிற்சி : முத்துமணி ராஜரத்தினம் தகவல்

இளைஞர்களுக்கு இலவச தொழில் நுட்ப பயிற்சி : முத்துமணி ராஜரத்தினம் தகவல்

சிவகங்கை : சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் காங்., வேட்பாளர் முத்துமணி ராஜரத்தினம் காஞ்சிரங்கால் பகுதியில் ஓட்டு சேகரித்தார். அவர் கூறியதாவது: நமது பகுதிக்கு சுத்தமான குடிநீர், அனைத்து தெருக்களுக்கும் விளக்கு, தரமான தார்சாலை,கிராமப்புறங்களுக்கு பஸ் வசதி,கழிவுநீர் வாய்க்கால், குளியலறை, கழிப்பறை வசதி செய்யப்படும். கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ், நூலகம், மனமகிழ் மன்றம் அமைத்து தரப்படும். மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டம் முழுமையாக நமது பகுதியில் நடைபெற்று வருகிறது. முதியோர் உதவி தொகை, பெண்கள் கல்வித்திட்டம், திருமண உதவி திட்டம், விதவைகள் உதவி தொகை உள்ளிட்ட திட்டங்கள் கிடைத்திட பாடுபடுவேன். இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, இலவச இன்டெர்நெட் வசதி,இலவச தொழிற் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை