உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரவங்கலாறு - சுருளிஅருவி இடையே ரோப் கார் வசதிக்கு வலியுறுத்தல்

இரவங்கலாறு - சுருளிஅருவி இடையே ரோப் கார் வசதிக்கு வலியுறுத்தல்

கம்பம்: இரவங்கலாறு - சுருளி அருவி இடையே ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்ட சுற்றுலா பகுதிகளில் சுருளி அருவி பிரதானமாக உள்ளது. அருவியில் குளிக்க தமிழகமெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஹைவேவிஸ், மணலாறு இரவங்கலாறு, தூவானம் , மகாராசா மெட்டு போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கும் செல்கின்றனர். இப்பகுதிகளுக்கு சென்று விட்டு சுருளி அருவிக்கு வர வேண்டும் என்றால் குறைந்தது 80 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும்.இதை தவிர்க்க இரவங்கலாறிலிருந்து சுருளி அருவிக்கு ரோப்கார் அமைத்தால் 30 நிமிடங்களில் சுருளி அருவிக்கு சென்று விடலாம். ஏற்கெனவே 15 ஆண்டுகளுக்கு முன் இது தொடர்பாக சர்வே நடந்தது.வனத்துறையினரின் ஆட்சேபனையால் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது புலிகள் காப்பகமாக மாறியுள்ளதால் நிச்சயம் ஆட்சேபம் தெரிவிப்பார்கள். ஆனால் தற்போது பழநி- கொடைக்கானல் இடையே ரோப்கார் அமைக்க ஆய்வுகள் துவங்கி உள்ளது.அதை சுட்டிக்காட்டி இரவங்கலாறு- சுருளி அருவி ரோப்கார் அமைக்கும் ஆய்வு பணியையும் மேற்கொண்டால், சுற்றுலா மேம்படும். வனத்துறை சூழல் சுற்றுலா திட்டத்தில் இந்த ரோப்கார் அமைக்கும் பணியை மேற்கொள்ளலாம். இதன் மூலம் வனப்பகுதி மேம்பாட்டிற்கான நிதியையும், இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு மேற்கொள்ளலாம் என்று சுற்றுலா ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி