உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கார் டிரைவரை கடத்தி தாக்கிய நால்வர் கைது

கார் டிரைவரை கடத்தி தாக்கிய நால்வர் கைது

தேனி: தேனியில் கார் டிரைவர் நாகராஜை கடத்தி தாக்கிய சுக்குவாடன்பட்டி ஆண்டவர் 46, அன்னஞ்சி சுந்தர் 24, பொம்மையகவுண்டன்பட்டி விஜயகுமார் 26, சுருளிபட்டி யோகேஷ்வரன் 24 ஆகிய நால்வரை தேனி போலீசார் கைது செய்தனர்.அரண்மனைப்புதுார் அருகே உள்ள அண்ணாநகர் கார் டிரைவர் நாகராஜ் 30. இவர் சுக்குவாடன்பட்டி ஆண்டவரிடம் ரூ. 2.20 லட்சம் கடன் வாங்கி இருந்தார். கடன் தொகையை உடனே திருப்பித் தருமாறு ஆண்டவர் கேட்டார். 15 நாட்களில் திருப்பி வழங்குவதாக நாகராஜ் கூறினார். இந்நிலையில் ஆண்டர் அவருடன் சிலர் இணைந்து நாகராஜை கடந்த மாதம் காரில் கடத்தினர். தொடர்ந்து, ஆண்டவர் வீட்டில் வைத்து நாகராஜை தாக்கினர். அங்கிருந்து காயங்களுடன் தப்பிய நாகராஜ் தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பின், தேனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் கார் டிரைவரை கடத்தி தாக்கிய ஆண்டவர், சுந்தர், விஜயகுமார், யோகேஷ்வரனை உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி