உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கிணறு அருகே தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அபாயம்

கிணறு அருகே தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அபாயம்

தேவாரம் : போடி அருகே திம்மிநாயக்கன்பட்டியில் இருந்து தேவாரம் செல்லும் ரோட்டில் கிணறு அருகே தடுப்புச் சுவர் இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. திம்மிநாயக்கன்பட்டி வழியாக எரணம்பட்டி செல்லும் ரோட்டின் அருகே கிணறுகள் அமைந்துள்ளன. கிணறுகள் அருகே உள்ள ரோட்டின் பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாமல் திறந்த வெளியாக உள்ளது. இரவு நேரங்களில் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது கிணறு இருக்கும் இடம் தெரியாத நிலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தடுப்புச்சுவர் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. விபத்து ஏற்படும் முன் ரோட்டின் ஓரத்தில் உள்ள கிணறுகளை ஒட்டி தடுப்புச்சுவர் அமைத்திட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ