உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இருளஞ்சேரியில் பராமரிப்பில்லாத சுடுகாடு

இருளஞ்சேரியில் பராமரிப்பில்லாத சுடுகாடு

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது இருளஞ்சேரி. இப்பகுதிவாசிகள் இறந்தவர்கள் உடலை அடக்கம் மற்றும் எரியூட்டுவதற்காக கூவம் ஆற்று கரையோரம் சுடுகாடு அமைந்துள்ளது. இதில், இறந்தவர்களின் உடலை எரியூட்டும் பகுதியில் சுடுகாடில் முட்புதர்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால், இறந்தவர்களின் உடலை எரியூட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், சுடுகாடு பகுதிக்கு சுற்றுச்சுவர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சியில் ஆய்வு செய்து சுடுகாடு பகுதியில் உள்ள புதர்களை அகற்றவும், சுற்றுச்சுவர் கட்டி, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இருளஞ்சேரி பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை