| ADDED : ஆக 19, 2024 01:38 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் குப்பம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 82. அரசு போக்குவரத்துக் கழகத்தில், 'மெக்கானிக்'காக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 16ம் தேதி காலை, வீட்டிலிருந்து வெளியே வந்தார். அப்போது, அங்கிருந்த விஷ வண்டு கடித்ததில் படுகாயமடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.