| ADDED : ஜன 24, 2024 12:28 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த சசிகுமார், லட்சுமி தம்பதியர் மகள் எஸ்.மைத்ரா, 7. அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகா பயின்று வருகிறார்.இவர், கண்டபேருண்டாசனம் எனும் யோகாசனத்தில் நின்றபடி, ஒரு நிமிடத்தில், 40 முறை சுழன்று சாதனை படைத்தார்.இவரது சாதனை, இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்', வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்', அசிஸ்ட் உலக சாதனை', ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன. சாதனை படைத்த அரசு பள்ளி மாணவி மைத்ரா, பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை கிராம மக்களும், சக மாணவர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.