உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / அரசு விடுதி காப்பாளர் சஸ்பெண்ட்

அரசு விடுதி காப்பாளர் சஸ்பெண்ட்

ஆம்பூர்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பத்தில், ஆதி திராவிடர் நல பள்ளி மாணவர்கள் விடுதி உள்ளது. இங்கு விடுதி காப்பாளராக வினோத்குமார், 40, என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, ஆம்பூர் ஆர்.டி.ஓ., அஜீதா பேகம் விடுதியில் ஆய்வு செய்தார். அப்போது விடுதி வார்டன் பணியில் இல்லாதது தெரியவந்தது. இது குறித்த அறிக்கையை, திருப்பத்துார் கலெக்டர் தர்ப்பகராஜிற்கு அளித்தார். அதன் அடிப்படையில், பணியில் இல்லாத விடுதி வார்டனை சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை