உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

உடுமலை:உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடந்தது.உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.நேற்று நடந்த ஏலத்திற்கு, உடுமலை,புக்குளம், விளாமரத்துப்பட்டி, கணக்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 10 விவசாயிகள், 25 மூட்டை கொப்பரை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இ - நாம் திட்டத்தின் கீழ், 5 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். இதில், இரண்டாம் தரம், ரூ.70.80 முதல், 74.39 வரையும் இணையதளத்தில் விலை கோரப்பட்டு, இறுதி செய்யப்பட்டது.ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், ''விவசாய விளைபொருட்கள் இ - நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. அதிக நிறுவனங்கள் பங்கேற்பதால், கூடுதல் விலை கிடைத்து வருகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ