உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அனுமதியின்றி கட்டுமானம் கலெக்டரிடம் புகார் மனு

அனுமதியின்றி கட்டுமானம் கலெக்டரிடம் புகார் மனு

திருப்பூர் : கணியாம்பூண்டி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் அங்குராஜ் ரஹீம், மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு:புதுப்பாளையம் ஊராட்சி, ரெட்ரோ பேக்கரில் எதிரில், தனியார் வணிக வளாகத்தின் முன், அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு, எவ்வித அனுமதியும் வாங்கவில்லை; ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் அனுமதி வாங்கவில்லை.எந்த அடிப்படையில், இந்த கட்டுமானத்தை எழுப்பினர் என்பது கேள்விக்குறி. எனவே, இக்கட்டுமானத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை