உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு ஊழியர் சங்க செயற்குழு ஆலோசனை

அரசு ஊழியர் சங்க செயற்குழு ஆலோசனை

திருப்பூர்:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது.திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரமணி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தில்லையப்பன் வரவேற்றார். இணை செயலாளர் ராமன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் பரமேஸ்வரி, இணை செயலாளர் வைரமுத்து உள்ளிட்டோர் பேசினர். செயற்குழு உறுப்பினர்கள், வட்ட கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சங்கத்தின் கடந்த கால செயல்பாடுகள் குறித்தும், எதிர்கால சங்க நடவடிக்கைகள் குறித்த திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் வட்டக்கிளை தோறும் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை