உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விழிப்புணர்வு தந்த அதிகாரிகள்

விழிப்புணர்வு தந்த அதிகாரிகள்

காங்கயம் அருகே, காடையூர் ஸ்ரீகாடேஸ் வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அன்னதானத்துக்கு உணவு தயாரிக்கும் இடம்; பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர். அன்னதானத்துக்கு தரமான காய்கறி, மசாலா உள்ளிட்ட உணவு பொருட்கள் பயன்படுத்த வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கவேண்டும். சுத்தமான குடிநீரையே சமையலுக்கு பயன்படுத்தவேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை