உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை

கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை

உடுமலை;கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை ரயில்கள் இயக்கப்படுகின்றன.மேலும், தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்யவும், டிக்கெட் எடுக்கவும் ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகின்றனர். எனவே, ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கவும் கண்காணிப்பு கேமராவை அமைக்கவும், அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கவும், தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடுமலை பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ